Tuesday, September 22, 2015

ஜெனீ­வாவில் யாருக்கு வெற்றி?

இலங்கை விவ­கா­ரத்தில் ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையை வெற்­றி­க­ர­மாகக் கையாண்ட தரப்பு, இலங்கை அர­சாங்­கமா அல்­லது அமெ­ரிக்­காவா என்ற கேள்வி எழுந்­தி­ருக்­கி­றது.
எண்­ணற்ற மீறல்­க­ளுடன் நடந்­தே­றிய இறு­திக்­கட்டப் போரின் பின்னர், கடந்த ஆறு ஆண்­டு­க­ளாக ஜெனீ­வா­வுக்கும் கொழும்­புக்கும் இடையில் ஒரு கயி­றி­ழுப்பு யுத்தம் நடந்து வந்­தது.
போரின் போதும், போருக்குப் பின்­னரும் இடம்­பெற்ற மீறல்­களை வெளிப்­ப­டுத்தி, அதற்குப் பொறுப்புக் கூறப்­பட வேண்டும் என்றும், இலங்­கையில் மனித உரி­மைகள் மதிக்­கப்­பட வேண்டும், பேணப்­பட வேண்டும் என்றும் தொடர்ச்­சி­யாக சர்­வ­தேச சமூகம் வலி­யு­றுத்தி வந்­துள்­ளது.
2009 ஆம் ஆண்­டுக்குப் பின்னர், அமெ­ரிக்கா உள்­ளிட்ட சர்­வ­தேச சமூ­கத்­தினால், பொறுப்­புக்­கூறல் மனித உரிமை பேணல் விவ­கா­ரங்கள் குறித்து, கொடுக்­கப்­பட்ட அழுத்­தங்­களை மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் கண்­டு­கொள்­ள­வில்லை.
போர் வெற்­றி­யினால் ஏற்­பட்ட மம­தையும், சிங்­கள மக்­க­ளி­டையே காணப்­பட்ட பேரா­த­ரவும், பொறுப்­புக்­கூறல், மனித உரிமை தொடர்­பாக கொடுக்­கப்­பட்ட வெளி­யு­லக அழுத்­தங்­களை மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் குறைத்து மதிப்­பிட வைத்­தி­ருந்­தது.
சர்­வ­தே­சத்­துக்கு அடி­ப­ணிய மாட்டோம் என்று சிங்­கள மக்கள் மத்­தியில் உணர்ச்சிப் பிர­வா­க­மூட்டும் உரை­களை நிகழ்த்தி, மஹிந்த ராஜ­பக் ஷ தனது அதி­கா­ரத்தை உறு­திப்­ப­டுத்தி வந்தார்.
இதன் கார­ண­மாக, 2012ஆம் ஆண்டு முதல் முறை­யாக இலங்கை குறித்த தீர்­மானம் ஒன்றைக் கொண்டு வந்­தது அமெ­ரிக்கா.
இலங்­கைக்கு எதி­ராகக் கொண்டு வரப்­பட்ட முத­லா­வது தீர்­மானம் என்று கூறப்­பட்­டாலும், அமெ­ரிக்கா அதனை அவ்­வாறு கூற­வில்லை.
இலங்­கையில் நல்­லி­ணக்­கத்தை ஊக்­கு­விப்­ப­தற்­காக- அதற்கு ஆத­ர­வாக கொண்டு வந்த தீர்­மானம் என்றே அமெ­ரிக்கா குறிப்­பிட்­டது.
அது நம்­ப­க­மான உள்­நாட்டுப் பொறுப்­புக்­கூ­ற­லையே வலி­யு­றுத்­தி­யது. உண்­மையில் அந்த தீர்­மானம் ஒரு மென் அழுத்தம் என்றே குறிப்­பி­டலாம்.
அந்த தீர்­மா­னத்­தையும் இலங்கை அர­சாங்கம் கண்­டு­கொள்­ள­வில்லை.
போரில் எந்த மீறல்­களும் நிக­ழ­வு­மில்லை, எந்த விசா­ர­ணை­களை நடத்தப் போவதும் இல்லை என்று அடித்துக் கூறி­யது.
அதை­ய­டுத்து. 2013ஆம் ஆண்டு மீண்டும் பொறுப்­புக்­கூ­றலை ஊக்­கு­விக்கும் தீர்­மா­னத்தைக் கொண்டு வந்­தது அமெ­ரிக்கா.
அதற்கும் மசி­யாத நிலையில்தான், 2014ஆம் ஆண்டு ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையின் விசா­ர­ணை­க­ளையும், உள்­நாட்டு பொறுப்­புக்­கூ­ற­லையும் ஊக்­கு­விக்கும் தீர்­மா­னத்தைக் கொண்டு வந்து நிறை­வேற்­றி­யது அமெ­ரிக்கா.
இந்த தீர்­மா­னத்தை இலங்­கைக்கு எதி­ராக அமெ­ரிக்கா கொண்டு வந்­த­தற்கு தனியே மனித உரி­மைகள் மீது அதற்கு இருக்கும் அக்­கறை மட்டும் கார­ண­மல்ல என்ற பொது­வான கருத்து உள்­ளது.
போருக்குப் பின்னர், சீன சார்பு அர­சாக இலங்கை மாறி­யதும், சீனாவின் பாது­காப்பு நலன்­க­ளுக்­காக கதவைத் திறந்து விட்­டதும், மேற்­கு­லக நாடு­க­ளுக்கு கடும் விச­னத்தை ஏற்­ப­டுத்­தி­யது.
மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தின் சீன சார்பு நிலையே, ஜெனீ­வாவில் இலங்­கைக்கு எதி­ரான நிலைப்­பா­டுகள் கடினமடை­வ­தற்கு கார­ண­மாக இருந்­தன என்­பதை மறுக்க முடி­யாது.
தாம் உள்­நாட்டு விசா­ரணை செய்­வ­தாகக் கூறிய போது அதனை அமெ­ரிக்கா தலை­மை­யி­லான மேற்­கு­லகம் ஏற்­க­வில்லை என்றும், சர்­வ­தேச விசா­ர­ணைக்கு வலி­யு­றுத்­தி­ய­தா­கவும், தற்­போது உள்­நாட்டு விசா­ர­ணைக்கு இணங்­கி­யி­ருப்­ப­தா­கவும் மஹிந்த ராஜபக் ஷ குறிப்­பிட்­ட­தாக அவ­ரது பேச்­சாளர் ரொஹான் வெலி­விட்ட கூறி­யி­ருந்தார்.
தம்­முடன் உள்­நாட்டு விசா­ரணை பற்றிப் பேச­வில்லை என்றும், மனித உரி­மை­களை வைத்து அர­சியல் நடத்­தப்­ப­டு­வ­தா­கவும் அவர் விசனம் வெளி­யிட்­டி­ருந்தார்.
மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் ஆட்­சியில் இருந்து அகற்­றப்­பட்­டதும், மேற்­கு­ல­கிற்குச் சாத­க­மான அர­சாங்கம் ஒன்று கொழும்பில் நிலை­நி­றுத்­தப்­பட்­டதும், சர்­வ­தேச விசா­ரணை அழுத்­தங்கள் குறைந்து போனது உண்மை.
எனவே, அமெ­ரிக்­காவோ மேற்­கு­ல­கமோ, இந்த விவ­கா­ரத்தை மனித உரிமை மீறல்­க­ளுக்கு பொறுப்­புக்­கூறும் விவ­கா­ர­மாக முற்­றிலும் கரு­தி­யி­ருக்­க­வில்லை.
இலங்­கையில் தாம் விரும்பும் மாற்­றத்­துக்­கான ஒரு கரு­வி­யா­கவே இந்த விவ­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி வந்­தி­ருந்­தன என்­பதில் சந்­தே­க­மில்லை.
கொழும்பில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­ட­துமே, ஜெனீவா விவ­கா­ரத்தில் அமெ­ரிக்கா எடுத்த நெகிழ்­வுப்­போக்­கான நிலைப்­பாடே அதற்குச் சான்று.
இன்­னொரு பக்­கத்தில் இந்த விட­யத்தில் இலங்கை அர­சாங்­கமும், ஜெனீ­வாவில் தன்னைப் பாது­காத்துக் கொண்­டி­ருக்­கி­றது.
ஆட்சி மாற்­றத்­துக்கு முன்­னைய எல்லா சம்­ப­வங்­க­ளுக்­கான பழி­யையும், மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தின் மீது சுமத்தி விட்டு, புதிய அர­சாங்கம் சர்­வ­தே­சத்­துடன் ஒத்­து­ழைக்கத் தயா­ராக இருக்­கி­றது என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.
வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் ஜெனீவா உரையில் பொய்­யான தக­வல்கள், வாக்­கு­று­திகள் கொடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தமிழ் அர­சியல் தலை­வர்கள் சிலர் விமர்­சனம் செய்­தி­ருந்­தாலும், சர்­வ­தேச சமூ­கத்­துக்கு அது நம்­பிக்­கையை கொடுத்­தி­ருக்­கி­றது என்­பதை மறுக்க முடி­யாது.
இதன் கார­ண­மாக, ஜெனீ­வாவில், இலங்­கைக்குச் சாத­க­மான நிலை ஒன்று காணப்­ப­டு­கி­றது.
உள்­நாட்டு விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்கு இலங்கை அர­சாங்கம் ஒரு குறிப்­பிட்ட கால­அ­வ­கா­சத்தைப் பெறு­வ­தற்கு முயற்­சிக்­கி­றது.
அடுத்த ஜன­வ­ரியில் தொடங்கி, ஒன்­றரை ஆண்­டு­க­ளுக்குள் அதனை முடிக்கத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக, வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்ளார்.
இந்த உள்­நாட்டுப் பொறுப்­புக்­கூ­ற­லையே ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை தற்­போ­தைக்கு ஏற்­றுக்­கொண்டால், அது இலங்கை அர­சாங்­கத்­துக்கு கிடைக்கும் மிகப் பெரிய வெற்­றி­யா­கவே அமையும்.
போர் முடிந்த பின்னர் ஐந்­தரை ஆண்­டு­க­ளாக பொறுப்­புக்­கூ­றலை மேற்­கொள்­ளாமல் இழுத்­த­டித்துக் காலத்தைக் கடத்­தி­யி­ருந்தார் மஹிந்த ராஜபக் ஷ.
மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்­கமும் ஏற்­க­னவே ஒன்­பது மாதங்­களைக் கடத்தி விட்­டது.
இந்த நிலையில் இன்னும் 20 மாதங்­க­ளுக்கு மேல் கால அவ­கா­சத்தைப் பெறும் திட்­டத்தில் அர­சாங்கம் இருக்­கி­றது.
ஜெனீ­வாவில்.....
(04ஆம் பக்கத் தொடர்ச்சி)
*மங்­கள சம­ர­வீ­ரவின் அறிக்­கை­யிலும் சரி, ஜன­நா­யகம், மனித உரி­மைகள், தொழி­லாளர் விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரிக்­காவின் உதவி இரா­ஜாங்கச் செயலர் ரொம் மாலி­னோவ்ஸ்கி வெளி­யிட்ட கருத்­திலும் சரி, குறு­கிய காலங்­களில் மாற்­றங்கள், அதி­ச­யங்கள் ஏற்­பட்டு விடாது என்று கூறப்­பட்­டது நினை­வி­ருக்­கலாம்.
நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூறல் குறு­கிய காலத்­துக்குள் சாத்­தி­யப்­ப­டாது என்­பதை சர்­வ­தேச சமூகம் ஏற்றுக் கொண்­டுள்­ளது.
எனவே, இலங்­கைக்கு இந்­த­முறை வழங்­கப்­படும் கால­அ­வ­காசம், குறு­கி­ய­தாக இருக்­காது. சில­வே­ளை­களில் அது கால­வ­ரை­ய­றை­யற்­ற­தா­கவும் கூட இருக்­கலாம்.
அவ்­வா­றான ஒரு நிலை ஏற்­பட்டால், பொறுப்­புக்­கூ­றலை இழுத்­த­டிக்கும் ஒட்­டு­மொத்த சிங்­கள அதி­கா­ர­வர்க்­கத்தின் திட்­டத்­துக்கு கிடைத்த வெற்­றி­யாக அமையும்.
மஹிந்த ராஜபக் ஷ எந்த விசா­ர­ணை­க­ளையும் நடத்த மாட்டேன் என்று கூறிக் காலம் கடத்­தினார். இப்­போ­தைய அர­சாங்கம் விசா­ரணை நடத்தப் போவ­தாகக் கூறி கால­அ­வ­கா­சத்தைப் பெறத் திட்­ட­மிட்­டுள்­ளது.
மஹிந்த ராஜபக் ஷவையும், இரா­ணுவ அதி­கா­ரி­க­ளையும் புதிய அர­சாங்கம் காப்­பாற்­றி­யி­ருப்­ப­தாக அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க குறிப்­பிட்­டி­ருந்தார்.
அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவும், அதையே கூறி­யுள்ளார். அதா­வது, ஆட்சி மாற்றம், அவர்­க­ளுக்கு இந்தப் பாது­காப்பை அளித்­தி­ருக்­கி­றது.
ஒரு வகையில், போர்க்­குற்­றங்­களில் ஈடு­பட்­ட­வர்­களைப் பாது­காப்­ப­தற்­காக கிடைத்­துள்ள அங்­கீ­கா­ர­மா­கவும் சிங்­கள அதி­கார வர்க்கம் இதனைக் கரு­தலாம்.
ஒரு பக்­கத்தில் ஜெனீ­வாவை வைத்து அமெ­ரிக்கா தனது தேவை­களை நிறை­வேற்­றி­யி­ருக்­கி­றது. இன்­னொரு பக்­கத்தில் இலங்கை அர­சாங்­கமும், தமது தேவை­களை நிறை­வேற்ற முனை­கி­றது.
ஆனால், இந்த விவ­கா­ரத்தில் பாதிக்­கப்­பட்ட தரப்­பான தமி­ழர்கள் கண்­டு­கொள்­ளப்­ப­டாமல் விடப்­பட்­டுள்­ளனர்.
தமி­ழர்­க­ளுக்கு நீதி வழங்­கப்­ப­டவும் இல்லை. தமி­ழர்­களின் எதிர்­பார்ப்­புகள் நிறை­வேற்­றப்­ப­டவும் இல்லை.
இந்­த­நி­லையில், சர்­வ­தேச சமூகம் தமி­ழர்­களின் நிலைப்­பாடு குறித்த கலந்­தா­லோ­ச­னை­களை நடத்­தா­ம­லேயே, முடி­வு­களை எடுக்கத் துணிந்­தி­ருக்­கி­றது.
ஆக, அமெ­ரிக்­கா­வுக்கோ, இலங்­கைக்கோ அல்­லது வேறெந்த நாட்­டுக்கோ, தமி­ழர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­திகள், தமது நலன் தேடு­வ­தற்­கான கரு­வி­க­ளா­கவே இருந்­துள்­ளன.
ஐ.நா விசா­ரணை அறிக்­கையில், கலப்பு விசா­ரணை நீதி­மன்­றத்­துக்கு பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும், இலங்கை அரசின் உள்­நாட்டு விசா­ர­ணைக்கு சார்­பான தீர்­மானம் ஒன்று நிறை­வேற்­றப்­பட்டால் அதில் அர்த்தம் இருக்­காது.
அதே­வேளை, அது தமி­ழர்­க­ளுக்கு ஒரு பாட­மா­கவும் அமையும்.
தம்மை, தமது நலன்­க­ளுக்குப் பயன்­ப­டுத்த முனையும் வெளிச்­சக்­திகள் குறித்து தெளி­வான நிலை ஒன்­றுக்கு வர­வேண்­டி­யதன் அவ­சியம் தமி­ழர்­களால் வலு­வாக உண­ரப்­படும்.
ஜெனீ­வாவில் நிறை­வேற்­றப்­ப­ட­வுள்ள அடுத்த தீர்­மானம் தான், யாருக்கு சார்­பாக ஜெனீவா நகர்­வுகள் சென்று கொண்­டி­ருக்­கின்­றன என்­பதைப் புரிந்து கொள்ள கொள்ள உதவும்.

Theepan N

About Theepan N

கிளிநொச்சி இணையதள பக்கத்துக்கு வரவேற்கின்றோம்.

Subscribe to this Blog via Email :