Tuesday, September 22, 2015

ஐ,நா அறிக்கை ஏற்­படுத்திய அதிர்வலைகள்

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­குழு இலங்கை தொடர்­பாக வெளி­யிட்­டுள்ள அறிக்கை குறித்து விரி­வாக புத்­தி­சா­லித்­த­ன­மாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். சில ஊட­கங்கள் இந்த அறிக்கை தொடர்­பாக கருத்­துக்கள் தவ­றா­ன­தெ­னவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் கூட்­டாக ஊட­கங்­களின் பிர­தா­னி­களை கடந்த வெள்­ளிக் ­கி­ழமை சந்­தித்த போது தெரி­வித்­துள்­ளனர்.
தற்­போது வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கையை அரசு ஆராய்ந்து வரு­வ­தா­கவும் எதிர்­வரும் 24ஆம் திகதி வெளி­யி­டப்­ப­ட­வுள்ள இறுதிப் பிரே­ர­ணையின் பின்னர் இலங்கை ஒரு தீர்க்­க­மான முடிவை எடுக்­கு­மெ­னவும் தேசிய விசா­ரணை அல்­லது சர்­வ­தேச விசா­ரணை ஆகிய இரண்டில் ஒன்றை தெரிவு செய்ய வேண்­டிய நிலை இலங்­கைக்கு ஏற்­ப­ட­லா­மெ­னவும், இருந்தும் இலங்கை தேசிய விசா­ர­ணையை தெரிவு செய்ய வேண்­டிய கட்­டா­யத்தில் இருப்­ப­தா­கவும் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் தெரி­வித்­துள்­ளனர்.
ஊட­கங்­களும் சில கட்­சிகள் விமர்­சிப்­பது போல் வெளி­யி­டப்­பட்ட அறிக்கை பயங்­க­ர­மா­னது அல்ல என்றும் அவர்கள் தெரி­வித்­தனர். இதே­வேளை, கடந்த புதன்­கி­ழமை ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் நாயகம் செயிட் அல் ­ஹுசேன் வெளி­யிட்ட அறிக்கை குறித்து அர­சியல் கட்­சி­களும் அமைப்­புக்­களும் எதி­ரா­னதும் ஆத­ர­வா­ன­து­மான கருத்­துக்­களைத் தெரி­வித்து வரு­கின்­றன.
ஜே.வி.பி. எதிர்ப்பு
யுத்தக் குற்­றங்கள் தொடர்­பான கலப்பு நீதி­மன்ற விசா­ர­ணையை இலங்கை ஏற்­கக்­கூ­டா­தென ஜே.வி.பி. தலைவர் அநுர குமார திசா­நா­யக்க தெரி­வித்­துள்ளார். வெளி­நாட்டு நீதி­ய­ர­சர்­களை கலப்பு நீதி­மன்­றத்­துக்கு நிய­மிப்­பது இலங்கை விவ­கா­ரத்தில் வெளி­நாடுகள் தலை­யி­டு­வது போல­ாகும் என்று அவர் விமர்­சித்­துள்ளார்.
கோத்த­பாய ராஜபக் ஷ எதிர்ப்பு
ஐ.நா. மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை ஏற்க முடி­யாது எனத் தெரி­வித்­துள்ள முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்த­பாய ராஜபக் ஷ ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இலங்­கைக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் வகையில் நடந்து கொள்ள மாட்­டார்கள் எனத் தாம் நம்­பு­வ­தா­கவும் தெரி­வித்­துள்ளார். படை­யினர் யாரா­வது குற்­ற­மி­ழைத்­தி­ருந்­தார்கள் என்றால் தண்­டிக்­கப்­பட வேண்டும். முழுப்­ப­டை­யினர் மீதும் குற்றம் சுமத்தக் கூடா­தென்றும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.
பிர­ஜைகள் அமைப்­புக்­களின்
கூட்­ட­மைப்பு வர­வேற்பு
ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் நாய­கத்தின் அறிக்­கையின் படி இலங்­கையில் வெளி­நாட்டு நீதி­ய­ர­சர்­க­ளுடன் கூடிய நீதி­மன்ற விசா­ரணை யுத்­தத்தின் போதும் யுத்­தத்தின் பின்­னரும் பாதிக்­கப்­பட்ட சகல மக்களுக்கும் நியாயத்தை பெற்றுக் கொடுக்குமென பிரஜைகள் அமைப்புக்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு
கலப்பு நீதிமன்ற விசாரணை உள்நாட்டில் நடத்தப்படுவதை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு வரவேற்றுள்ளது.
இலங்­கையில் இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்­றுள்ள போர்க்­குற்­றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் அறிக்கை இலங்­கையில் பெரும் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
இலங்கை படை­யினர் மற்றும் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பு ஆகிய இரண்டு தரப்பும் யுத்­தத்­தின்­போது பார­தூ­ர­மான மனித உரிமை மீறல்­களில் ஈடு­பட்­ட­தாக அந்த அறிக்­கையில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது. அறிக்­கையின்படி பெரும்­பா­லான குற்­றச்­செ­யல்­களில் அரச படை­யினர் ஈடு­பட்­ட­தா­கவும் அறிக்கை தெரி­விக்­கின்­றது.
* மிகக்­கொ­டூ­ர­மான பாலியல் வன்­மு­றைகள்
* நீதிக்கு புறம்­பான கொலைகள்
* சர­ண­டைந்­த­வர்கள் காணாமற் போனமை
* வெள்ளை ேவன் கடத்­தல்கள்
* மருத்­து­வ­ம­னைகள் மீது ஷெல் தாக்­கு­தல்கள்
* குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­ப­டாமை
போன்ற விட­யங்கள் பல தரப்­பி­ன­ராலும் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இச்­சம்­ப­வங்­களை நேரில் கண்­டோரின் சாட்­சி­யங்கள் மூலம் நிரூ­ப­ண­மா­கி­யுள்­ள­தா­கவும் அந்த அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.
இலங்கை போர்க்­குற்­றங்கள் தொடர்­பான அறிக்­கையை கடந்த புதன்­கி­ழமை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் வெளி­யிட்டு உரை­யாற்­றினார். இக்­குற்­றங்கள் தொடர்­பாக கலப்பு நீதி­மன்றம் அமைத்து இலங்கை விசா­ரணை செய்ய வேண்­டு­மெ­னவும் அவர் கோரிக்கை விடுத்­துள்ளார்.
கலப்பு நீதி­மன்றம் என்றால் என்ன?
கலப்பு நீதி­மன்றம் என்­பது சர்­வ­தேச நீதி­ய­ர­சர்கள் மற்றும் உள்ளூர் நீதி­ய­ர­சர்­களைக் கொண்டு அமைக்­கப்­படும் நீதி­மன்­ற­மாகும். இதில் வெளி­நாட்டு சட்­டத்­த­ர­ணி­களும் உள்­ள­டக்­கப்­ப­டலாம்.
ஐக்­கிய நாடுகள் சபையின் சிபா­ரி­சின்­படி இந்த கலப்பு நீதி­மன்­றங்கள் தற்­போது நான்கு நாடு­களில் அமைக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் நடை­பெற்று வரு­கின்­றன.
ஆபி­ரிக்கா, சிய­ரா­லி­யோனில் ஒரு கலப்பு நீதி­மன்றம் சிறுவர் விட­யங்கள் தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது.
லெப­னானில் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்ள கலப்பு நீதி­மன்றம் இஸ்ரேல் தொடர்­பான அத்துமீறல்­களை விசா­ரணை செய்து வரு­கின்­றது.
கம்­போ­டி­யா­வி­லுள்ள கலப்பு நீதி­மன்றம் பொல்பொட் தொடர்­பா­கவும் இனப்படுகொலை தொடர்பாகவும் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது.
கிழக்கு திமோரில் அமைக்­கப்­பட்­டுள்ள கலப்பு நீதி­மன்றம் இந்­தோ­னே­ஷிய விவ­காரம் தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. இந்த கலப்பு நீதி­மன்­றங்கள் சம்­பந்­தப்­பட்ட நாடு­களில் இடம்­பெற்ற உள்ளூர் வன்­மு­றைகள், இனப்­ப­டு­கொ­லைகள் தொடர்­பா­கவே விசா­ர­ணை களை மேற்­கொண்டு வரு­கின்­றன.
சர்­வ­தேச நீதி­மன்­றங்கள்
இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான மோதல்கள், இரு நாடு­க­ளுக்­கி­டையே செய்து கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தங்­களை மீறுதல் போன்ற விட­யங்கள் குறித்து விசா­ர­ணை­களை மேற்­கொள்ள மூன்று நீதி­மன்­றங்கள் நெதர்­லாந்தில் இயங்கி வரு­கின்­றன.
கலப்பு நீதி­மன்றம் அமைக்க இலங்கை சட்­டத்தில் இட­முள்­ளதா?
ஐக்­கிய நாடுகள் மனிதஉரிமை ஆணை­யா­ளரின் அறிக்­கையின் படி இலங்­கையின் சட்­டங்­களின்படி கலப்பு நீதி­மன்றம் அமைப்­ப­தற்கு வழி­வகை செய்­யப்­ப­ட­வில்லை. இலங்­கையில் கலப்பு நீதி­மன்றம் அமைப்­ப­தற்கு நீதித்­துறைச் சட்­டங்­களில் திருத்­தங்­களை மேற்­கொள்ள வேண்டும் என்று சட்­ட­ வல்­லு­நர்கள் தெரி­விக்­கின்­றனர். கலப்பு நீதி­மன்றம் அமைத்து உள்­ளூ­ரி­லேயே விசா­ரணை நடத்த வேண்­டு­மென ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்­கை­யிலே தெரி­வித்­துள்­ளதை இலங்கை ஏற்­றுக்­கொண்­டாலும் கலப்பு நீதி­மன்ற விசா­ர­ணை­களை ஆரம்­பிக்க நீண்ட காலம் எடுக்­கலாம்.
இலங்­கையில் கலப்பு நீதி­மன்றம் அமைப்­ப­தற்கு ஏது­வான வகையில் புதிய சட்டத் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டி­யுள்­ளது. இதற்கு நீண்ட காலம் தேவைப்­படும் என்றும் கலப்பு நீதி­மன்றம் ஏற்­ப­டுத்­தப்­பட்டு விசா­ர­ணைகள் நடை­பெற்­றாலும் தீர்ப்பு வெளி­வர பல வரு­டங்­க­ளா­க­லா­மென்று சட்ட நிபு­ணர்கள் தெரி­விக்­கின்­றனர்.
இன­வாதம் கக்கும்
அர­சி­யல்­வா­திகள்
பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்­திய விஜ­யத்தை மேற்­கொள்­வ­தற்கு முன்­னரே ''சீபா'' ஒப்­பந்­தத்தில் அவர் கைச்­சாத்­தி­டப்­போ­வ­தாகக் கூறி தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச கோட்டை ரயில் நிலை­யத்­துக்கு முன்­பாக தனது கோஷ்­டி­யி­ன­ருடன் துண்டுப் பிர­சு­ரங்­களை விநி­யோ­கிக்கத் தொடங்கி விட்டார்.
''சீபா'' ஒப்­பந்­தத்தில் இலங்கை சார்­பாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க புது­டில்­லியில் கைச்­சாத்­திடப் போகின்றார். அப்­படி கைச்­சாத்­திட்டால் இலங்கை இந்­தி­யாவின் ஒரு கால­னித்­துவ ஆட்­சிக்குக் கீழ் வந்து விடும். இந்­திய வைத்­தி­யர்கள், பொறி­யி­ய­லா­ளர்கள் இங்கு வந்து சுதந்­தி­ர­மாக தொழில் செய்­யக்­கூ­டிய வாய்ப்பு ஏற்­படும் என்று விமல் வீரவன்ச பேசத் தொடங்கி விட்டார்.
அதுமட்­டு­மன்றி, இந்­தி­யா­வி­லி­ருந்து தேயிலைத் தோட்­டங்­களில் கூலி வேலைக்கு இலங்கை வந்தோர் இன்று காணி உரி­மையும் கேட்­கின்­றனர். இந்த நிலையில் ''சீபா'' ஒப்­பந்­தமும் கைச்­சாத்­தாகி விட்டால் இலங்கை இந்­தி­யாவின் கால­னித்­துவ நாடாக மாறி விடும் என்றும் அவர் எச்­ச­ரித்­துள்ளார்.
விமல் வீர­வன்ச எம்.பி.யின் கூற்று முற்றும் முழு­வ­து­மான இன­வா­தத்தைத் தூண்­டு­வ­தாக அமைந்­துள்­ளது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்­தி­யா­வுக்குச் செல்லும் முன்­னரே ''சீபா'' ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­படும் என அனு­மா­னித்து அவர் அதை எதிர்த்து துண்டுப் பிர­சு­ரங்­களை விநி­யோ­கித்­துள்ளார்.
ஐக்­கிய தேசியக் கட்சி 2002 ஆம் ஆண்டு ஆட்­சி­யி­லி­ருந்த போது இந்­திய அர­சாங்­கத்­துடன் ''சீபா'' ஒப்­பந்­த­மொன்றில் கைச்­சாத்­திடத் தயா­ரா­னது. உள்ளூர் வர்த்­தக சமூகம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரி­வித்­ததை அடுத்து ''சீபா'' ஒப்­பந்தம் கிடப்பில் போடப்­பட்­டது.
பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இம்­முறை பத­வி­யேற்ற பின்னர் இந்­தி­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் செய்த போது இந்­தி­யா­வுடன் நான்கு ஒப்­பந்­தங்கள் செய்து கொள்­ளப்­பட்­டன. பிர­த­ம­ருடன் முத­லீட்டு ஊக்­கு­விப்பு அமைச்சர் மலித் சம­ர­விக்­ரம புது­டில்லி சென்­றி­ருந்தார்.
அவர் இந்­தி­யா­வுக்குப் புறப்­படும் முன்­னரே ''சீபா'' ஒப்­பந்தம் குறித்து தாம் பேசப்­போ­வ­தில்லை என்று தெரி­வித்­தி­ருந்­ததும் குறிப்­பி­டத்­தக்­கது.
அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிப்­பது போல் ''சீபா'' ஒப்­பந்­தத்தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கைச்சாத்திடலாம் என்று நினைத்துக் கொண்டு கோட்டை ரயில் நிலை­யத்­துக்கு முன்னால் துண்டுப் பிர­சுரம் விநி­யோ­கிக்­கு­ம­ள­வுக்கு இவர்கள் அர­சியல் வங்­கு­ரோத்து நிலையை அடைந்­துள்­ளனர் என்றே கூற வேண்டும்.
இன­வா­தத்தை தூண்டி விட்டு அதன் மூலம் அர­சியல் இலாபம் பெற நினைப்­பது இந்தக் காலத்­துக்கு உகந்த டெக்னிக் ஆக அமையப் போவ­தில்லை.
பிர­தமர் ரணில் இந்­திய விஜயம்
நான்கு ஒப்­பந்­தங்கள் கைச்­சாத்து
பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பத­வி­யேற்ற பின்னர் முதல் வெளி­நாட்டுப் பய­ண­ மொன்றை மேற்­கொண்டு கடந்த 14ஆம் திகதி இந்­தி­யா­வுக்குப் பய­ண­மானார். புது­டில்­லியில் இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி மற்றும் அமைச்­சர்­க­ளையும் காங்­கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிர­தமர் மன்­மோகன் சிங், ராகுல் காந்தி ஆகி­யோ­ரையும் சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். பிர­த­மரின் இந்­திய விஜ­யத்தின் போது இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்­கு­மி­டையில் நான்கு ஒப்­பந்­தங்கள் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளன. இதில் ''சீபா'' ஒப்­பந்தம் இடம்­பெ­ற­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
எதிர்க்­கட்­சியில் அமரும் ஸ்ரீல.சு.க. உறுப்­பி­னர்­களின்
எண்­ணிக்கை குறை­கி­றது.
பாரா­ளு­மன்றம் முதன்முறை­யாக கூடிய போது எதிர்க்­கட்சி வரி­சையில் 57 ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உட்­பட ஐ.ம.சு. கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தயா­ரா­க­வி­ருப்­ப­தாக மஹிந்த தரப்பு முக்­கி­யஸ்­தரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக கனவு கொண்­டி­ருந்­த­வ­ரு­மான குமார வெல்­கம தெரி­வித்­தி­ருந்தார். இச்­செய்தி ஊட­கங்­களில் வெளி வந்­தி­ருந்­தது. நாட்கள் செல்லச் செல்ல இந்த எண்­ணிக்கை 55ஆகவும் அதற்குப் பின்னர் 45 ஆகவும் குறைந்­தது.
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினர்.
இந்த பேச்­சு­வார்த்­தையில் ஸ்ரீ.ல.சு.கட்சி உறுப்­பி­னர்கள் 27 பேர் தம்மை எதிர்க்­கட்சி வரி­சையில் அமர அனு­ம­திக்க வேண்­டு­மென ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­தனர். இதற்கு ஜனா­தி­பதி சில நிபந்­த­னையின் பேரில் அனு­மதி அளித்தார்.
எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை கோர முடி­யாது. அரசின் திட்­டங்கள், அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­க­ளுக்கு குந்­த­க­மாக செயற்­படக் கூடாது என்ற நிபந்­த­னையின் கீழ் இதற்கு ஜனா­தி­பதி அனு­ம­தி­ய­ளித்தார்.
இவ்­வாறு ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் எதிர்க்­கட்சித் தலைவர் கனவு கலைந்து விட்­டது என்றே கூற வேண்டும்.
மஹிந்த தரப்பு சார்பில் பொதுத்­தேர்­த­லின்­போது தீவி­ர­மாக மைத்­திரி தரப்பை தோற்­க­டிக்க பிர­சாரம் மேற்­கொண்ட டி.பி. ஏக்­க­நா­யக்க, கிஷாந்த முத்­து­ஹெட்­டி­கம சந்­திம வீரக்­கொடி ஆகியோர் புதிய அர­சாங்­கத்தில் அமைச்சுப் பத­வி­களை ஏற்­றுக்­கொண்டு மஹிந்த தரப்பை கைவிட்­டுள்­ளனர். ஐ.ம.சு. கூட்­ட­மைப்பின் எதிர்க்­கட்சித் தலைவர் பதவி கைகூ­டாமற் போன­தற்கு இதுவும் ஒரு கார­ண­மாகும்.
ஊவா மாகாண முத­ல­மைச்சர் பதவி சஷீந்­திர ராஜ­பக் ஷ­வி­ட­மி­ருந்து கைந­ழு­வி­யது
ஊவா மாகாண சபை ஆட்சி ஒன்­பது மாதங்­களின் பின்னர் மீண்டும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு வச­மா­னது. ஆனால், முன்னாள் முத­ல­மைச்சர் சஷீந்­திர ராஜ­பக்ஷ்­வுக்குப் பதி­லாக புதிய முத­ல­மைச்­ச­ராக ஜன­ாதி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ர­வான சாமர சம்பத் திசா­நா­யக்க நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.
சாமர சம்பத் திசா­நா­யக்க கடந்த பொதுத்­தேர்­தலில் போட்­டி­யிட்டு பதுளை மாவட்­டத்தில் ஐ.ம.சு. கூட்­ட­மைப்பு பட்­டி­யலில் இரண்­டா­வ­தாக அதிக விருப்பு வாக்­கு­களைப் பெற்று வெற்­றி­யீட்­டினார். இதே மாவட்­டத்தில் ஐ.ம.சு. கூட்டமைப்பு பட்டியலில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன தோல்வியுற்றார். பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தோல்வியுற்ற லக்ஷ்மன் செனவிரத்ன பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்து சாமர சம்பத் திசாநாயக்காவை தொடர்ந்து மாகாண சபையில் இருக்கும்படியும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தமக்கு விட்டுக்கொடுக்கும்படி கோரிக்கை விடுத்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதை லக்ஷ்மன் செனவிரத்ன மறுத்ததுடன் இச் செய்தியை பரப்பியவர்களுக்கு எதி ராக மானநஷ்ட ஈடு வழக்குத் தொடரப் போவதாகவும் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
தேர்தலில் தோல்வியுற்ற லக்ஷ்மன் செனவிரத்ன எம்.பி.யாகிறார்
சாமர சம்பத் திசாநாயக ஊவா மாகாண சபை முதலமைச்சராக பதவியேற்றுக ்கொண்டார். இவரது பாராளுமன்ற வெற்றிடத்துக்கு பதுளை மாவட்ட ஐ.ம.சு. கூட்டமைப்பு பட்டியலில் அடுத்ததாக அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற லக்ஷ்மன் செனவிரத்ன நியமிக்கப்படவுள்ளார்.
மஹிந்த தரப்பு ஆதரவாளரான இவர்,  22 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Theepan N

About Theepan N

கிளிநொச்சி இணையதள பக்கத்துக்கு வரவேற்கின்றோம்.

Subscribe to this Blog via Email :