Advertise Here

Tuesday, September 22, 2015

கிளி. நீதிமன்றத்தின் சான்றுப் பொருள் காப்பகம் உடைக்கப்பட்டு பொருட்கள் திருட்டு!

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தின் சான்றுப் பொருள் காப்பகம் அடையாளம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு சான்றுப் பொருட்கள் சில திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்களை வழங்க நீதிமன்றம் மற்றும் கிளிநொச்சி மாவட்டப் பொலிஸார் மறுத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த வெள்ளிக்கிழமை மாவட்ட நீதிமன்றம் பூட்டப்பட்டு ஊழியர்கள் சென்றுள்ளனர்.

இதன் பின்னர் வந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் விடுமுறை தினங்கள் என்பதால் நீதிமன்றம் இயங்கவில்லை.

இந்நிலையில் இன்றைய தினம் நீதிமன்றம் அமர்வுகளின் போது, சான்றுப் பொருள் காப்பகம் உடைக்கப்பட்டு சான்றுப் பொருட்கள் சில திருடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கிளி.பொலிஸ் நிலையத்தின் தடயவியல் ஆய்வு பொலிஸார் மற்றும் மோப்ப நாய்களை கொண்டு இன்றைய தினம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், மேற்படி இரு விடுமுறை, தினங்களிலும் காவல் கடமையில் இருந்த காவலாளிகள் மற்றும் சான்றுப் பொருட்கள் காப்பகத்தின் பணியாளர்களிடமும் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் உன்மையில் என்ன நடந்தது? சான்றுப் பொருட்கள் எவையேனும் திருடப்பட்டுள்ளனவா? என்பது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள், எவையும் கிடைக்கவில்லை.


இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் உயிருடன் பிடித்து சுட்டுப் படுகொலை செய்தது: ஐ.நா.

இலங்கை ராணுவத்தால் விடுதலைப் புலிகள் இயக்க தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா உயிருடன் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்டார் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைய அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது.

2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான இறுதி யுத்தத்தின் போது இலங்கை ராணுவம் நிகழ்த்திய மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களை கல்லம் மெக்ரே ஆவணப்படமாக்கினார்.

இந்த ஆவணப்படத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் உயிருடன் கைது செய்து பின்னர் படுகொலை செய்த வீடியோ, புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன.

ஆனால் இதை இலங்கை அரசும் ராணுவமும் தொடர்ந்து மறுத்துவந்தது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கைது செய்து படுகொலை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சோபனா தர்மராஜா என்ற இசைப்பிரியா, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செய்தி வாசிப்பாளர். அவர் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டது தொடர்பான ஏராளமான வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

மே 18-ந் தேதி காலை வட்டுக்காவல் பாலத்தின் வடக்கே நந்திக் கடல் பகுதியில் இருந்து இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் உயிருடன் கைது செய்ததை பலரும் நேரில் பார்த்திருக்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கைது செய்வதை ஒரு வீடியோ காட்சி உறுதிப்படுத்துகிறது.

அப்போது இலங்கை ராணுவம் அவர் போர்த்திக் கொள்ள மேலாடை ஒன்றையும் கொடுத்ததும் அதில் இடம்பெற்றுள்ளது.

அந்த மேலாடை போர்த்தப்பட்ட நிலையில் இளம்பெண் அருகே இசைப்பிரியா உட்காரவைக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.

அதேபோல் இசைப்பிரியா உயிரிழந்த நிலையில் சடலமாக இருக்கும் வீடியோ காட்சிகள், புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

இதில் இசைப்பிரியாவின் உடல் உறுப்புகள் தெரியும் வகையில் உடைகள் திட்டமிட்டே விலக்கி வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை தடவியல் துறையினர் ஆராய்ந்த போது இலங்கை ராணுவத்தால் இசைப்பிரியா உயிருடன் பிடிக்கப்பட்டு தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐ,நா அறிக்கை ஏற்­படுத்திய அதிர்வலைகள்

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­குழு இலங்கை தொடர்­பாக வெளி­யிட்­டுள்ள அறிக்கை குறித்து விரி­வாக புத்­தி­சா­லித்­த­ன­மாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். சில ஊட­கங்கள் இந்த அறிக்கை தொடர்­பாக கருத்­துக்கள் தவ­றா­ன­தெ­னவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் கூட்­டாக ஊட­கங்­களின் பிர­தா­னி­களை கடந்த வெள்­ளிக் ­கி­ழமை சந்­தித்த போது தெரி­வித்­துள்­ளனர்.
தற்­போது வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கையை அரசு ஆராய்ந்து வரு­வ­தா­கவும் எதிர்­வரும் 24ஆம் திகதி வெளி­யி­டப்­ப­ட­வுள்ள இறுதிப் பிரே­ர­ணையின் பின்னர் இலங்கை ஒரு தீர்க்­க­மான முடிவை எடுக்­கு­மெ­னவும் தேசிய விசா­ரணை அல்­லது சர்­வ­தேச விசா­ரணை ஆகிய இரண்டில் ஒன்றை தெரிவு செய்ய வேண்­டிய நிலை இலங்­கைக்கு ஏற்­ப­ட­லா­மெ­னவும், இருந்தும் இலங்கை தேசிய விசா­ர­ணையை தெரிவு செய்ய வேண்­டிய கட்­டா­யத்தில் இருப்­ப­தா­கவும் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் தெரி­வித்­துள்­ளனர்.
ஊட­கங்­களும் சில கட்­சிகள் விமர்­சிப்­பது போல் வெளி­யி­டப்­பட்ட அறிக்கை பயங்­க­ர­மா­னது அல்ல என்றும் அவர்கள் தெரி­வித்­தனர். இதே­வேளை, கடந்த புதன்­கி­ழமை ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் நாயகம் செயிட் அல் ­ஹுசேன் வெளி­யிட்ட அறிக்கை குறித்து அர­சியல் கட்­சி­களும் அமைப்­புக்­களும் எதி­ரா­னதும் ஆத­ர­வா­ன­து­மான கருத்­துக்­களைத் தெரி­வித்து வரு­கின்­றன.
ஜே.வி.பி. எதிர்ப்பு
யுத்தக் குற்­றங்கள் தொடர்­பான கலப்பு நீதி­மன்ற விசா­ர­ணையை இலங்கை ஏற்­கக்­கூ­டா­தென ஜே.வி.பி. தலைவர் அநுர குமார திசா­நா­யக்க தெரி­வித்­துள்ளார். வெளி­நாட்டு நீதி­ய­ர­சர்­களை கலப்பு நீதி­மன்­றத்­துக்கு நிய­மிப்­பது இலங்கை விவ­கா­ரத்தில் வெளி­நாடுகள் தலை­யி­டு­வது போல­ாகும் என்று அவர் விமர்­சித்­துள்ளார்.
கோத்த­பாய ராஜபக் ஷ எதிர்ப்பு
ஐ.நா. மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை ஏற்க முடி­யாது எனத் தெரி­வித்­துள்ள முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்த­பாய ராஜபக் ஷ ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இலங்­கைக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் வகையில் நடந்து கொள்ள மாட்­டார்கள் எனத் தாம் நம்­பு­வ­தா­கவும் தெரி­வித்­துள்ளார். படை­யினர் யாரா­வது குற்­ற­மி­ழைத்­தி­ருந்­தார்கள் என்றால் தண்­டிக்­கப்­பட வேண்டும். முழுப்­ப­டை­யினர் மீதும் குற்றம் சுமத்தக் கூடா­தென்றும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.
பிர­ஜைகள் அமைப்­புக்­களின்
கூட்­ட­மைப்பு வர­வேற்பு
ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் நாய­கத்தின் அறிக்­கையின் படி இலங்­கையில் வெளி­நாட்டு நீதி­ய­ர­சர்­க­ளுடன் கூடிய நீதி­மன்ற விசா­ரணை யுத்­தத்தின் போதும் யுத்­தத்தின் பின்­னரும் பாதிக்­கப்­பட்ட சகல மக்களுக்கும் நியாயத்தை பெற்றுக் கொடுக்குமென பிரஜைகள் அமைப்புக்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு
கலப்பு நீதிமன்ற விசாரணை உள்நாட்டில் நடத்தப்படுவதை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு வரவேற்றுள்ளது.
இலங்­கையில் இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்­றுள்ள போர்க்­குற்­றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் அறிக்கை இலங்­கையில் பெரும் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
இலங்கை படை­யினர் மற்றும் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பு ஆகிய இரண்டு தரப்பும் யுத்­தத்­தின்­போது பார­தூ­ர­மான மனித உரிமை மீறல்­களில் ஈடு­பட்­ட­தாக அந்த அறிக்­கையில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது. அறிக்­கையின்படி பெரும்­பா­லான குற்­றச்­செ­யல்­களில் அரச படை­யினர் ஈடு­பட்­ட­தா­கவும் அறிக்கை தெரி­விக்­கின்­றது.
* மிகக்­கொ­டூ­ர­மான பாலியல் வன்­மு­றைகள்
* நீதிக்கு புறம்­பான கொலைகள்
* சர­ண­டைந்­த­வர்கள் காணாமற் போனமை
* வெள்ளை ேவன் கடத்­தல்கள்
* மருத்­து­வ­ம­னைகள் மீது ஷெல் தாக்­கு­தல்கள்
* குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­ப­டாமை
போன்ற விட­யங்கள் பல தரப்­பி­ன­ராலும் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இச்­சம்­ப­வங்­களை நேரில் கண்­டோரின் சாட்­சி­யங்கள் மூலம் நிரூ­ப­ண­மா­கி­யுள்­ள­தா­கவும் அந்த அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.
இலங்கை போர்க்­குற்­றங்கள் தொடர்­பான அறிக்­கையை கடந்த புதன்­கி­ழமை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் வெளி­யிட்டு உரை­யாற்­றினார். இக்­குற்­றங்கள் தொடர்­பாக கலப்பு நீதி­மன்றம் அமைத்து இலங்கை விசா­ரணை செய்ய வேண்­டு­மெ­னவும் அவர் கோரிக்கை விடுத்­துள்ளார்.
கலப்பு நீதி­மன்றம் என்றால் என்ன?
கலப்பு நீதி­மன்றம் என்­பது சர்­வ­தேச நீதி­ய­ர­சர்கள் மற்றும் உள்ளூர் நீதி­ய­ர­சர்­களைக் கொண்டு அமைக்­கப்­படும் நீதி­மன்­ற­மாகும். இதில் வெளி­நாட்டு சட்­டத்­த­ர­ணி­களும் உள்­ள­டக்­கப்­ப­டலாம்.
ஐக்­கிய நாடுகள் சபையின் சிபா­ரி­சின்­படி இந்த கலப்பு நீதி­மன்­றங்கள் தற்­போது நான்கு நாடு­களில் அமைக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் நடை­பெற்று வரு­கின்­றன.
ஆபி­ரிக்கா, சிய­ரா­லி­யோனில் ஒரு கலப்பு நீதி­மன்றம் சிறுவர் விட­யங்கள் தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது.
லெப­னானில் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்ள கலப்பு நீதி­மன்றம் இஸ்ரேல் தொடர்­பான அத்துமீறல்­களை விசா­ரணை செய்து வரு­கின்­றது.
கம்­போ­டி­யா­வி­லுள்ள கலப்பு நீதி­மன்றம் பொல்பொட் தொடர்­பா­கவும் இனப்படுகொலை தொடர்பாகவும் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது.
கிழக்கு திமோரில் அமைக்­கப்­பட்­டுள்ள கலப்பு நீதி­மன்றம் இந்­தோ­னே­ஷிய விவ­காரம் தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. இந்த கலப்பு நீதி­மன்­றங்கள் சம்­பந்­தப்­பட்ட நாடு­களில் இடம்­பெற்ற உள்ளூர் வன்­மு­றைகள், இனப்­ப­டு­கொ­லைகள் தொடர்­பா­கவே விசா­ர­ணை களை மேற்­கொண்டு வரு­கின்­றன.
சர்­வ­தேச நீதி­மன்­றங்கள்
இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான மோதல்கள், இரு நாடு­க­ளுக்­கி­டையே செய்து கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தங்­களை மீறுதல் போன்ற விட­யங்கள் குறித்து விசா­ர­ணை­களை மேற்­கொள்ள மூன்று நீதி­மன்­றங்கள் நெதர்­லாந்தில் இயங்கி வரு­கின்­றன.
கலப்பு நீதி­மன்றம் அமைக்க இலங்கை சட்­டத்தில் இட­முள்­ளதா?
ஐக்­கிய நாடுகள் மனிதஉரிமை ஆணை­யா­ளரின் அறிக்­கையின் படி இலங்­கையின் சட்­டங்­களின்படி கலப்பு நீதி­மன்றம் அமைப்­ப­தற்கு வழி­வகை செய்­யப்­ப­ட­வில்லை. இலங்­கையில் கலப்பு நீதி­மன்றம் அமைப்­ப­தற்கு நீதித்­துறைச் சட்­டங்­களில் திருத்­தங்­களை மேற்­கொள்ள வேண்டும் என்று சட்­ட­ வல்­லு­நர்கள் தெரி­விக்­கின்­றனர். கலப்பு நீதி­மன்றம் அமைத்து உள்­ளூ­ரி­லேயே விசா­ரணை நடத்த வேண்­டு­மென ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்­கை­யிலே தெரி­வித்­துள்­ளதை இலங்கை ஏற்­றுக்­கொண்­டாலும் கலப்பு நீதி­மன்ற விசா­ர­ணை­களை ஆரம்­பிக்க நீண்ட காலம் எடுக்­கலாம்.
இலங்­கையில் கலப்பு நீதி­மன்றம் அமைப்­ப­தற்கு ஏது­வான வகையில் புதிய சட்டத் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டி­யுள்­ளது. இதற்கு நீண்ட காலம் தேவைப்­படும் என்றும் கலப்பு நீதி­மன்றம் ஏற்­ப­டுத்­தப்­பட்டு விசா­ர­ணைகள் நடை­பெற்­றாலும் தீர்ப்பு வெளி­வர பல வரு­டங்­க­ளா­க­லா­மென்று சட்ட நிபு­ணர்கள் தெரி­விக்­கின்­றனர்.
இன­வாதம் கக்கும்
அர­சி­யல்­வா­திகள்
பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்­திய விஜ­யத்தை மேற்­கொள்­வ­தற்கு முன்­னரே ''சீபா'' ஒப்­பந்­தத்தில் அவர் கைச்­சாத்­தி­டப்­போ­வ­தாகக் கூறி தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச கோட்டை ரயில் நிலை­யத்­துக்கு முன்­பாக தனது கோஷ்­டி­யி­ன­ருடன் துண்டுப் பிர­சு­ரங்­களை விநி­யோ­கிக்கத் தொடங்கி விட்டார்.
''சீபா'' ஒப்­பந்­தத்தில் இலங்கை சார்­பாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க புது­டில்­லியில் கைச்­சாத்­திடப் போகின்றார். அப்­படி கைச்­சாத்­திட்டால் இலங்கை இந்­தி­யாவின் ஒரு கால­னித்­துவ ஆட்­சிக்குக் கீழ் வந்து விடும். இந்­திய வைத்­தி­யர்கள், பொறி­யி­ய­லா­ளர்கள் இங்கு வந்து சுதந்­தி­ர­மாக தொழில் செய்­யக்­கூ­டிய வாய்ப்பு ஏற்­படும் என்று விமல் வீரவன்ச பேசத் தொடங்கி விட்டார்.
அதுமட்­டு­மன்றி, இந்­தி­யா­வி­லி­ருந்து தேயிலைத் தோட்­டங்­களில் கூலி வேலைக்கு இலங்கை வந்தோர் இன்று காணி உரி­மையும் கேட்­கின்­றனர். இந்த நிலையில் ''சீபா'' ஒப்­பந்­தமும் கைச்­சாத்­தாகி விட்டால் இலங்கை இந்­தி­யாவின் கால­னித்­துவ நாடாக மாறி விடும் என்றும் அவர் எச்­ச­ரித்­துள்ளார்.
விமல் வீர­வன்ச எம்.பி.யின் கூற்று முற்றும் முழு­வ­து­மான இன­வா­தத்தைத் தூண்­டு­வ­தாக அமைந்­துள்­ளது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்­தி­யா­வுக்குச் செல்லும் முன்­னரே ''சீபா'' ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­படும் என அனு­மா­னித்து அவர் அதை எதிர்த்து துண்டுப் பிர­சு­ரங்­களை விநி­யோ­கித்­துள்ளார்.
ஐக்­கிய தேசியக் கட்சி 2002 ஆம் ஆண்டு ஆட்­சி­யி­லி­ருந்த போது இந்­திய அர­சாங்­கத்­துடன் ''சீபா'' ஒப்­பந்­த­மொன்றில் கைச்­சாத்­திடத் தயா­ரா­னது. உள்ளூர் வர்த்­தக சமூகம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரி­வித்­ததை அடுத்து ''சீபா'' ஒப்­பந்தம் கிடப்பில் போடப்­பட்­டது.
பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இம்­முறை பத­வி­யேற்ற பின்னர் இந்­தி­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் செய்த போது இந்­தி­யா­வுடன் நான்கு ஒப்­பந்­தங்கள் செய்து கொள்­ளப்­பட்­டன. பிர­த­ம­ருடன் முத­லீட்டு ஊக்­கு­விப்பு அமைச்சர் மலித் சம­ர­விக்­ரம புது­டில்லி சென்­றி­ருந்தார்.
அவர் இந்­தி­யா­வுக்குப் புறப்­படும் முன்­னரே ''சீபா'' ஒப்­பந்தம் குறித்து தாம் பேசப்­போ­வ­தில்லை என்று தெரி­வித்­தி­ருந்­ததும் குறிப்­பி­டத்­தக்­கது.
அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிப்­பது போல் ''சீபா'' ஒப்­பந்­தத்தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கைச்சாத்திடலாம் என்று நினைத்துக் கொண்டு கோட்டை ரயில் நிலை­யத்­துக்கு முன்னால் துண்டுப் பிர­சுரம் விநி­யோ­கிக்­கு­ம­ள­வுக்கு இவர்கள் அர­சியல் வங்­கு­ரோத்து நிலையை அடைந்­துள்­ளனர் என்றே கூற வேண்டும்.
இன­வா­தத்தை தூண்டி விட்டு அதன் மூலம் அர­சியல் இலாபம் பெற நினைப்­பது இந்தக் காலத்­துக்கு உகந்த டெக்னிக் ஆக அமையப் போவ­தில்லை.
பிர­தமர் ரணில் இந்­திய விஜயம்
நான்கு ஒப்­பந்­தங்கள் கைச்­சாத்து
பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பத­வி­யேற்ற பின்னர் முதல் வெளி­நாட்டுப் பய­ண­ மொன்றை மேற்­கொண்டு கடந்த 14ஆம் திகதி இந்­தி­யா­வுக்குப் பய­ண­மானார். புது­டில்­லியில் இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி மற்றும் அமைச்­சர்­க­ளையும் காங்­கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிர­தமர் மன்­மோகன் சிங், ராகுல் காந்தி ஆகி­யோ­ரையும் சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். பிர­த­மரின் இந்­திய விஜ­யத்தின் போது இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்­கு­மி­டையில் நான்கு ஒப்­பந்­தங்கள் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளன. இதில் ''சீபா'' ஒப்­பந்தம் இடம்­பெ­ற­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
எதிர்க்­கட்­சியில் அமரும் ஸ்ரீல.சு.க. உறுப்­பி­னர்­களின்
எண்­ணிக்கை குறை­கி­றது.
பாரா­ளு­மன்றம் முதன்முறை­யாக கூடிய போது எதிர்க்­கட்சி வரி­சையில் 57 ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உட்­பட ஐ.ம.சு. கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தயா­ரா­க­வி­ருப்­ப­தாக மஹிந்த தரப்பு முக்­கி­யஸ்­தரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக கனவு கொண்­டி­ருந்­த­வ­ரு­மான குமார வெல்­கம தெரி­வித்­தி­ருந்தார். இச்­செய்தி ஊட­கங்­களில் வெளி வந்­தி­ருந்­தது. நாட்கள் செல்லச் செல்ல இந்த எண்­ணிக்கை 55ஆகவும் அதற்குப் பின்னர் 45 ஆகவும் குறைந்­தது.
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினர்.
இந்த பேச்­சு­வார்த்­தையில் ஸ்ரீ.ல.சு.கட்சி உறுப்­பி­னர்கள் 27 பேர் தம்மை எதிர்க்­கட்சி வரி­சையில் அமர அனு­ம­திக்க வேண்­டு­மென ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­தனர். இதற்கு ஜனா­தி­பதி சில நிபந்­த­னையின் பேரில் அனு­மதி அளித்தார்.
எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை கோர முடி­யாது. அரசின் திட்­டங்கள், அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­க­ளுக்கு குந்­த­க­மாக செயற்­படக் கூடாது என்ற நிபந்­த­னையின் கீழ் இதற்கு ஜனா­தி­பதி அனு­ம­தி­ய­ளித்தார்.
இவ்­வாறு ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் எதிர்க்­கட்சித் தலைவர் கனவு கலைந்து விட்­டது என்றே கூற வேண்டும்.
மஹிந்த தரப்பு சார்பில் பொதுத்­தேர்­த­லின்­போது தீவி­ர­மாக மைத்­திரி தரப்பை தோற்­க­டிக்க பிர­சாரம் மேற்­கொண்ட டி.பி. ஏக்­க­நா­யக்க, கிஷாந்த முத்­து­ஹெட்­டி­கம சந்­திம வீரக்­கொடி ஆகியோர் புதிய அர­சாங்­கத்தில் அமைச்சுப் பத­வி­களை ஏற்­றுக்­கொண்டு மஹிந்த தரப்பை கைவிட்­டுள்­ளனர். ஐ.ம.சு. கூட்­ட­மைப்பின் எதிர்க்­கட்சித் தலைவர் பதவி கைகூ­டாமற் போன­தற்கு இதுவும் ஒரு கார­ண­மாகும்.
ஊவா மாகாண முத­ல­மைச்சர் பதவி சஷீந்­திர ராஜ­பக் ஷ­வி­ட­மி­ருந்து கைந­ழு­வி­யது
ஊவா மாகாண சபை ஆட்சி ஒன்­பது மாதங்­களின் பின்னர் மீண்டும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு வச­மா­னது. ஆனால், முன்னாள் முத­ல­மைச்சர் சஷீந்­திர ராஜ­பக்ஷ்­வுக்குப் பதி­லாக புதிய முத­ல­மைச்­ச­ராக ஜன­ாதி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ர­வான சாமர சம்பத் திசா­நா­யக்க நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.
சாமர சம்பத் திசா­நா­யக்க கடந்த பொதுத்­தேர்­தலில் போட்­டி­யிட்டு பதுளை மாவட்­டத்தில் ஐ.ம.சு. கூட்­ட­மைப்பு பட்­டி­யலில் இரண்­டா­வ­தாக அதிக விருப்பு வாக்­கு­களைப் பெற்று வெற்­றி­யீட்­டினார். இதே மாவட்­டத்தில் ஐ.ம.சு. கூட்டமைப்பு பட்டியலில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன தோல்வியுற்றார். பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தோல்வியுற்ற லக்ஷ்மன் செனவிரத்ன பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்து சாமர சம்பத் திசாநாயக்காவை தொடர்ந்து மாகாண சபையில் இருக்கும்படியும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தமக்கு விட்டுக்கொடுக்கும்படி கோரிக்கை விடுத்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதை லக்ஷ்மன் செனவிரத்ன மறுத்ததுடன் இச் செய்தியை பரப்பியவர்களுக்கு எதி ராக மானநஷ்ட ஈடு வழக்குத் தொடரப் போவதாகவும் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
தேர்தலில் தோல்வியுற்ற லக்ஷ்மன் செனவிரத்ன எம்.பி.யாகிறார்
சாமர சம்பத் திசாநாயக ஊவா மாகாண சபை முதலமைச்சராக பதவியேற்றுக ்கொண்டார். இவரது பாராளுமன்ற வெற்றிடத்துக்கு பதுளை மாவட்ட ஐ.ம.சு. கூட்டமைப்பு பட்டியலில் அடுத்ததாக அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற லக்ஷ்மன் செனவிரத்ன நியமிக்கப்படவுள்ளார்.
மஹிந்த தரப்பு ஆதரவாளரான இவர்,  22 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜெனீ­வாவில் யாருக்கு வெற்றி?

இலங்கை விவ­கா­ரத்தில் ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையை வெற்­றி­க­ர­மாகக் கையாண்ட தரப்பு, இலங்கை அர­சாங்­கமா அல்­லது அமெ­ரிக்­காவா என்ற கேள்வி எழுந்­தி­ருக்­கி­றது.
எண்­ணற்ற மீறல்­க­ளுடன் நடந்­தே­றிய இறு­திக்­கட்டப் போரின் பின்னர், கடந்த ஆறு ஆண்­டு­க­ளாக ஜெனீ­வா­வுக்கும் கொழும்­புக்கும் இடையில் ஒரு கயி­றி­ழுப்பு யுத்தம் நடந்து வந்­தது.
போரின் போதும், போருக்குப் பின்­னரும் இடம்­பெற்ற மீறல்­களை வெளிப்­ப­டுத்தி, அதற்குப் பொறுப்புக் கூறப்­பட வேண்டும் என்றும், இலங்­கையில் மனித உரி­மைகள் மதிக்­கப்­பட வேண்டும், பேணப்­பட வேண்டும் என்றும் தொடர்ச்­சி­யாக சர்­வ­தேச சமூகம் வலி­யு­றுத்தி வந்­துள்­ளது.
2009 ஆம் ஆண்­டுக்குப் பின்னர், அமெ­ரிக்கா உள்­ளிட்ட சர்­வ­தேச சமூ­கத்­தினால், பொறுப்­புக்­கூறல் மனித உரிமை பேணல் விவ­கா­ரங்கள் குறித்து, கொடுக்­கப்­பட்ட அழுத்­தங்­களை மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் கண்­டு­கொள்­ள­வில்லை.
போர் வெற்­றி­யினால் ஏற்­பட்ட மம­தையும், சிங்­கள மக்­க­ளி­டையே காணப்­பட்ட பேரா­த­ரவும், பொறுப்­புக்­கூறல், மனித உரிமை தொடர்­பாக கொடுக்­கப்­பட்ட வெளி­யு­லக அழுத்­தங்­களை மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் குறைத்து மதிப்­பிட வைத்­தி­ருந்­தது.
சர்­வ­தே­சத்­துக்கு அடி­ப­ணிய மாட்டோம் என்று சிங்­கள மக்கள் மத்­தியில் உணர்ச்சிப் பிர­வா­க­மூட்டும் உரை­களை நிகழ்த்தி, மஹிந்த ராஜ­பக் ஷ தனது அதி­கா­ரத்தை உறு­திப்­ப­டுத்தி வந்தார்.
இதன் கார­ண­மாக, 2012ஆம் ஆண்டு முதல் முறை­யாக இலங்கை குறித்த தீர்­மானம் ஒன்றைக் கொண்டு வந்­தது அமெ­ரிக்கா.
இலங்­கைக்கு எதி­ராகக் கொண்டு வரப்­பட்ட முத­லா­வது தீர்­மானம் என்று கூறப்­பட்­டாலும், அமெ­ரிக்கா அதனை அவ்­வாறு கூற­வில்லை.
இலங்­கையில் நல்­லி­ணக்­கத்தை ஊக்­கு­விப்­ப­தற்­காக- அதற்கு ஆத­ர­வாக கொண்டு வந்த தீர்­மானம் என்றே அமெ­ரிக்கா குறிப்­பிட்­டது.
அது நம்­ப­க­மான உள்­நாட்டுப் பொறுப்­புக்­கூ­ற­லையே வலி­யு­றுத்­தி­யது. உண்­மையில் அந்த தீர்­மானம் ஒரு மென் அழுத்தம் என்றே குறிப்­பி­டலாம்.
அந்த தீர்­மா­னத்­தையும் இலங்கை அர­சாங்கம் கண்­டு­கொள்­ள­வில்லை.
போரில் எந்த மீறல்­களும் நிக­ழ­வு­மில்லை, எந்த விசா­ர­ணை­களை நடத்தப் போவதும் இல்லை என்று அடித்துக் கூறி­யது.
அதை­ய­டுத்து. 2013ஆம் ஆண்டு மீண்டும் பொறுப்­புக்­கூ­றலை ஊக்­கு­விக்கும் தீர்­மா­னத்தைக் கொண்டு வந்­தது அமெ­ரிக்கா.
அதற்கும் மசி­யாத நிலையில்தான், 2014ஆம் ஆண்டு ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையின் விசா­ர­ணை­க­ளையும், உள்­நாட்டு பொறுப்­புக்­கூ­ற­லையும் ஊக்­கு­விக்கும் தீர்­மா­னத்தைக் கொண்டு வந்து நிறை­வேற்­றி­யது அமெ­ரிக்கா.
இந்த தீர்­மா­னத்தை இலங்­கைக்கு எதி­ராக அமெ­ரிக்கா கொண்டு வந்­த­தற்கு தனியே மனித உரி­மைகள் மீது அதற்கு இருக்கும் அக்­கறை மட்டும் கார­ண­மல்ல என்ற பொது­வான கருத்து உள்­ளது.
போருக்குப் பின்னர், சீன சார்பு அர­சாக இலங்கை மாறி­யதும், சீனாவின் பாது­காப்பு நலன்­க­ளுக்­காக கதவைத் திறந்து விட்­டதும், மேற்­கு­லக நாடு­க­ளுக்கு கடும் விச­னத்தை ஏற்­ப­டுத்­தி­யது.
மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தின் சீன சார்பு நிலையே, ஜெனீ­வாவில் இலங்­கைக்கு எதி­ரான நிலைப்­பா­டுகள் கடினமடை­வ­தற்கு கார­ண­மாக இருந்­தன என்­பதை மறுக்க முடி­யாது.
தாம் உள்­நாட்டு விசா­ரணை செய்­வ­தாகக் கூறிய போது அதனை அமெ­ரிக்கா தலை­மை­யி­லான மேற்­கு­லகம் ஏற்­க­வில்லை என்றும், சர்­வ­தேச விசா­ர­ணைக்கு வலி­யு­றுத்­தி­ய­தா­கவும், தற்­போது உள்­நாட்டு விசா­ர­ணைக்கு இணங்­கி­யி­ருப்­ப­தா­கவும் மஹிந்த ராஜபக் ஷ குறிப்­பிட்­ட­தாக அவ­ரது பேச்­சாளர் ரொஹான் வெலி­விட்ட கூறி­யி­ருந்தார்.
தம்­முடன் உள்­நாட்டு விசா­ரணை பற்றிப் பேச­வில்லை என்றும், மனித உரி­மை­களை வைத்து அர­சியல் நடத்­தப்­ப­டு­வ­தா­கவும் அவர் விசனம் வெளி­யிட்­டி­ருந்தார்.
மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் ஆட்­சியில் இருந்து அகற்­றப்­பட்­டதும், மேற்­கு­ல­கிற்குச் சாத­க­மான அர­சாங்கம் ஒன்று கொழும்பில் நிலை­நி­றுத்­தப்­பட்­டதும், சர்­வ­தேச விசா­ரணை அழுத்­தங்கள் குறைந்து போனது உண்மை.
எனவே, அமெ­ரிக்­காவோ மேற்­கு­ல­கமோ, இந்த விவ­கா­ரத்தை மனித உரிமை மீறல்­க­ளுக்கு பொறுப்­புக்­கூறும் விவ­கா­ர­மாக முற்­றிலும் கரு­தி­யி­ருக்­க­வில்லை.
இலங்­கையில் தாம் விரும்பும் மாற்­றத்­துக்­கான ஒரு கரு­வி­யா­கவே இந்த விவ­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி வந்­தி­ருந்­தன என்­பதில் சந்­தே­க­மில்லை.
கொழும்பில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­ட­துமே, ஜெனீவா விவ­கா­ரத்தில் அமெ­ரிக்கா எடுத்த நெகிழ்­வுப்­போக்­கான நிலைப்­பாடே அதற்குச் சான்று.
இன்­னொரு பக்­கத்தில் இந்த விட­யத்தில் இலங்கை அர­சாங்­கமும், ஜெனீ­வாவில் தன்னைப் பாது­காத்துக் கொண்­டி­ருக்­கி­றது.
ஆட்சி மாற்­றத்­துக்கு முன்­னைய எல்லா சம்­ப­வங்­க­ளுக்­கான பழி­யையும், மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தின் மீது சுமத்தி விட்டு, புதிய அர­சாங்கம் சர்­வ­தே­சத்­துடன் ஒத்­து­ழைக்கத் தயா­ராக இருக்­கி­றது என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.
வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் ஜெனீவா உரையில் பொய்­யான தக­வல்கள், வாக்­கு­று­திகள் கொடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தமிழ் அர­சியல் தலை­வர்கள் சிலர் விமர்­சனம் செய்­தி­ருந்­தாலும், சர்­வ­தேச சமூ­கத்­துக்கு அது நம்­பிக்­கையை கொடுத்­தி­ருக்­கி­றது என்­பதை மறுக்க முடி­யாது.
இதன் கார­ண­மாக, ஜெனீ­வாவில், இலங்­கைக்குச் சாத­க­மான நிலை ஒன்று காணப்­ப­டு­கி­றது.
உள்­நாட்டு விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்கு இலங்கை அர­சாங்கம் ஒரு குறிப்­பிட்ட கால­அ­வ­கா­சத்தைப் பெறு­வ­தற்கு முயற்­சிக்­கி­றது.
அடுத்த ஜன­வ­ரியில் தொடங்கி, ஒன்­றரை ஆண்­டு­க­ளுக்குள் அதனை முடிக்கத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக, வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்ளார்.
இந்த உள்­நாட்டுப் பொறுப்­புக்­கூ­ற­லையே ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை தற்­போ­தைக்கு ஏற்­றுக்­கொண்டால், அது இலங்கை அர­சாங்­கத்­துக்கு கிடைக்கும் மிகப் பெரிய வெற்­றி­யா­கவே அமையும்.
போர் முடிந்த பின்னர் ஐந்­தரை ஆண்­டு­க­ளாக பொறுப்­புக்­கூ­றலை மேற்­கொள்­ளாமல் இழுத்­த­டித்துக் காலத்தைக் கடத்­தி­யி­ருந்தார் மஹிந்த ராஜபக் ஷ.
மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்­கமும் ஏற்­க­னவே ஒன்­பது மாதங்­களைக் கடத்தி விட்­டது.
இந்த நிலையில் இன்னும் 20 மாதங்­க­ளுக்கு மேல் கால அவ­கா­சத்தைப் பெறும் திட்­டத்தில் அர­சாங்கம் இருக்­கி­றது.
ஜெனீ­வாவில்.....
(04ஆம் பக்கத் தொடர்ச்சி)
*மங்­கள சம­ர­வீ­ரவின் அறிக்­கை­யிலும் சரி, ஜன­நா­யகம், மனித உரி­மைகள், தொழி­லாளர் விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரிக்­காவின் உதவி இரா­ஜாங்கச் செயலர் ரொம் மாலி­னோவ்ஸ்கி வெளி­யிட்ட கருத்­திலும் சரி, குறு­கிய காலங்­களில் மாற்­றங்கள், அதி­ச­யங்கள் ஏற்­பட்டு விடாது என்று கூறப்­பட்­டது நினை­வி­ருக்­கலாம்.
நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூறல் குறு­கிய காலத்­துக்குள் சாத்­தி­யப்­ப­டாது என்­பதை சர்­வ­தேச சமூகம் ஏற்றுக் கொண்­டுள்­ளது.
எனவே, இலங்­கைக்கு இந்­த­முறை வழங்­கப்­படும் கால­அ­வ­காசம், குறு­கி­ய­தாக இருக்­காது. சில­வே­ளை­களில் அது கால­வ­ரை­ய­றை­யற்­ற­தா­கவும் கூட இருக்­கலாம்.
அவ்­வா­றான ஒரு நிலை ஏற்­பட்டால், பொறுப்­புக்­கூ­றலை இழுத்­த­டிக்கும் ஒட்­டு­மொத்த சிங்­கள அதி­கா­ர­வர்க்­கத்தின் திட்­டத்­துக்கு கிடைத்த வெற்­றி­யாக அமையும்.
மஹிந்த ராஜபக் ஷ எந்த விசா­ர­ணை­க­ளையும் நடத்த மாட்டேன் என்று கூறிக் காலம் கடத்­தினார். இப்­போ­தைய அர­சாங்கம் விசா­ரணை நடத்தப் போவ­தாகக் கூறி கால­அ­வ­கா­சத்தைப் பெறத் திட்­ட­மிட்­டுள்­ளது.
மஹிந்த ராஜபக் ஷவையும், இரா­ணுவ அதி­கா­ரி­க­ளையும் புதிய அர­சாங்கம் காப்­பாற்­றி­யி­ருப்­ப­தாக அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க குறிப்­பிட்­டி­ருந்தார்.
அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவும், அதையே கூறி­யுள்ளார். அதா­வது, ஆட்சி மாற்றம், அவர்­க­ளுக்கு இந்தப் பாது­காப்பை அளித்­தி­ருக்­கி­றது.
ஒரு வகையில், போர்க்­குற்­றங்­களில் ஈடு­பட்­ட­வர்­களைப் பாது­காப்­ப­தற்­காக கிடைத்­துள்ள அங்­கீ­கா­ர­மா­கவும் சிங்­கள அதி­கார வர்க்கம் இதனைக் கரு­தலாம்.
ஒரு பக்­கத்தில் ஜெனீ­வாவை வைத்து அமெ­ரிக்கா தனது தேவை­களை நிறை­வேற்­றி­யி­ருக்­கி­றது. இன்­னொரு பக்­கத்தில் இலங்கை அர­சாங்­கமும், தமது தேவை­களை நிறை­வேற்ற முனை­கி­றது.
ஆனால், இந்த விவ­கா­ரத்தில் பாதிக்­கப்­பட்ட தரப்­பான தமி­ழர்கள் கண்­டு­கொள்­ளப்­ப­டாமல் விடப்­பட்­டுள்­ளனர்.
தமி­ழர்­க­ளுக்கு நீதி வழங்­கப்­ப­டவும் இல்லை. தமி­ழர்­களின் எதிர்­பார்ப்­புகள் நிறை­வேற்­றப்­ப­டவும் இல்லை.
இந்­த­நி­லையில், சர்­வ­தேச சமூகம் தமி­ழர்­களின் நிலைப்­பாடு குறித்த கலந்­தா­லோ­ச­னை­களை நடத்­தா­ம­லேயே, முடி­வு­களை எடுக்கத் துணிந்­தி­ருக்­கி­றது.
ஆக, அமெ­ரிக்­கா­வுக்கோ, இலங்­கைக்கோ அல்­லது வேறெந்த நாட்­டுக்கோ, தமி­ழர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­திகள், தமது நலன் தேடு­வ­தற்­கான கரு­வி­க­ளா­கவே இருந்­துள்­ளன.
ஐ.நா விசா­ரணை அறிக்­கையில், கலப்பு விசா­ரணை நீதி­மன்­றத்­துக்கு பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும், இலங்கை அரசின் உள்­நாட்டு விசா­ர­ணைக்கு சார்­பான தீர்­மானம் ஒன்று நிறை­வேற்­றப்­பட்டால் அதில் அர்த்தம் இருக்­காது.
அதே­வேளை, அது தமி­ழர்­க­ளுக்கு ஒரு பாட­மா­கவும் அமையும்.
தம்மை, தமது நலன்­க­ளுக்குப் பயன்­ப­டுத்த முனையும் வெளிச்­சக்­திகள் குறித்து தெளி­வான நிலை ஒன்­றுக்கு வர­வேண்­டி­யதன் அவ­சியம் தமி­ழர்­களால் வலு­வாக உண­ரப்­படும்.
ஜெனீ­வாவில் நிறை­வேற்­றப்­ப­ட­வுள்ள அடுத்த தீர்­மானம் தான், யாருக்கு சார்­பாக ஜெனீவா நகர்­வுகள் சென்று கொண்­டி­ருக்­கின்­றன என்­பதைப் புரிந்து கொள்ள கொள்ள உதவும்.